எரிபொருள் தீர்ந்ததால் கலவரம்: இராணுவ வீரரின் கை துண்டிப்பு!

Date:

எம்பிலிபிட்டிய 100 கட்டடை பகுதியில், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சண்டையின் போது பாதுகாப்பில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத் தினத்தன்று  காலை இந்த எரிவாயு நிலையத்தில் 92 ஒக்டேன் வகை பெற்றோல் பவுசர் ஒன்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரிசையில் நின்ற வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், மாலை மூன்று மணியளவில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக கூறியதையடுத்து வரிசையில் நின்றவர்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கை உடைத்தனர்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்புக்கு இராணுவ வீரர்களும் இருந்துள்ளனர். அப்போது, இடம்பெற்ற கலவரத்தின் போது, ​​இராணுவ வீரரின் கை வெட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வரிசையில் இருந்த நபர் ஒருவர் தனது கையை வெட்டியதாகவும் குறித்த இராணுவ வீரர் மருத்துவமனையில் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...