எரிபொருள் நெருக்கடி: 26 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள் பணியிடங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பல அலுவலக ரயில்களும் உள்ளடங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...