எரிபொருள் நெருக்கடி: 26 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள் பணியிடங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பல அலுவலக ரயில்களும் உள்ளடங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...