எரிபொருள் விநியோகம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Date:

எரிபொருள் கொள்வனவு, விநியோகம், போன்றவற்றில் எந்தெந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் 14ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...