காட்டு யானை மீது மோதி வாகன விபத்து: பிரபல சிங்கள நடிகர் உட்பட மூவர் காயம்

Date:

அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில் சிங்கள திரைப்பட நடிகரும், பிரபல அறிவிப்பாளருமான ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜாக்சன் அந்தோணி கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு  ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அநுராதபுரத்திற்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியுடன் பயணித்த சமன் ஆண்டனி மற்றும் ஐரேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் மொரகொட பிரதேசவாசிகள் மற்றும் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...