காட்டு யானை மீது மோதி வாகன விபத்து: பிரபல சிங்கள நடிகர் உட்பட மூவர் காயம்

Date:

அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில் சிங்கள திரைப்பட நடிகரும், பிரபல அறிவிப்பாளருமான ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜாக்சன் அந்தோணி கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு  ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அநுராதபுரத்திற்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியுடன் பயணித்த சமன் ஆண்டனி மற்றும் ஐரேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் மொரகொட பிரதேசவாசிகள் மற்றும் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...