கொவிட் காரணமாக, ராகம ரயில் நிலையம் மூடப்பட்டது!

Date:

ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக் காட்டியதால் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகவும், பயணச்சீட்டு ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதால் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி ரயில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...