பொல்துவ சந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய போராட்டக்காரர் பெதும் கெர்னர் கைது!

Date:

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும், போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெதும் கெர்னர் இன்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், தாம் சுகயீனமுற்றிருப்பதாக சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் தங்கியிருந்து பல்வேறு வழிகளில் மக்களை அந்த இடத்திற்கு வருமாறு தெரிவித்தும், பாராளுமன்ற பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வீதித் தடைகளை உடைக்கும் பணியில் மக்களை வழிநடத்திச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு, எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினரில் இருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்.

மேலும் தீவிரவாதிகள் அவர்களிடமிருந்து T-56 துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள வெடிமருந்துகள் அடங்கிய பொதிகளையும் கடத்திச் சென்றனர்.

மீகவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படும் பெதும் கெர்னருக்கு எதிராக நீதிமன்றில் இருந்து பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...