கோட்டாபய இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை: இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ  மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியது தொடர்பாக, இந்தியா அதற்கு ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் தவறானவை.

ஜனநாயக அமைப்புகள் மற்றும் விழுமியங்கள், ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் போது இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அது மேலும் கூறுகிறது.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...