கோட்டாபய இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை: இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ  மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியது தொடர்பாக, இந்தியா அதற்கு ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் தவறானவை.

ஜனநாயக அமைப்புகள் மற்றும் விழுமியங்கள், ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் போது இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அது மேலும் கூறுகிறது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...