சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேர் கைது!

Date:

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் இன்றைய வானிலை.

ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக...

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று ...

அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள்...

துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான...