ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

Date:

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத முதிர்ந்த தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

மேலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்லக்கூடிய தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அடங்குவர்.

இதையடுத்து ஜனாதிபதி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதன் பின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...