‘ஜனாதிபதி இலங்கையிலேயே இருக்கிறார், வாய் தவறி கூறிவிட்டேன்’: சபாநாயகர்

Date:

நான் சர்வதேச ஊடகமான (பிபிசி) நேர்காணலில் தவறு செய்துவிட்டேன் என்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் தாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக தான் பிபிசி உலகச்சேவைக்கு வாய் தவறி கூறிவிட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எங்கே இருக்கின்றார், என்று பிபிசி உலகசேவை கேள்வியெழுப்பியது,
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அவர் அண்டை நாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் 13 ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.

அதன்பின் இந்திய ஊடகத்திற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருக்கிறார், வாய்தவறி கூறிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...