ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியது: ‘கோட்டாபயவுக்கு புகலிடம் வழங்கக்கூடாது’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 3.07 மணியளவில் மாலைத்தீவில் உள்ள வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்ஷ வந்திறங்கினார், அந்த நேரத்தில் மாலத்தீவு தலைநகர் பலத்த பாதுகாப்பில் இருந்ததாக ஆதாரங்கள் ஆங்கில ஊடகமான்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

ராஜபக்சக்களை மாலைதீவில் தரையிறக்குமாறு ஜனாதிபதி மொஹமட் நஷீத் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த விமானம் வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான அன்டோனோவ் 32 ரக விமானம் மூலம் ஜனாதிபதியின் குழு மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...