ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு தினேஷ் இரங்கல்!

Date:

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பாராளுமன்ற சபைத் தலைவர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜப்பான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷியும் கலந்துகொண்டார்.

மேலும், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்காக இன்று (12) தேசிய துக்க தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் கடந்த 8ஆம் திகதி ஜப்பானின் நாரா நகரில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...