ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றம் ஜூலை 15ஆம் திகதி கூடவுள்ளது, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும், ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமைக்குள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...