ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றம் ஜூலை 15ஆம் திகதி கூடவுள்ளது, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும், ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமைக்குள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...