‘நாட்டில் அமைதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு தாருங்கள்’: சவேந்திர சில்வா விசேட அறிக்கை

Date:

நாட்டில் அமைதியை நிலை நாட்ட பொலிஸால் மற்றும் ஆயுதப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போ, அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்களை அழிக்கக்கூடாது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப் படைகளும் பொலிஸ்துறையும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டன. குறிப்பாக இன்று சபாநாயகர் எங்களிடம் கூறினார்.

ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி பதவி விலகிய நிலையில், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடினோம் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...