நாட்டில் நெருக்கடி தொடர்ந்தால் இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள்: செல்வம் எம்.பி

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில புலம் பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் இதற்காக நாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியா தலையிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

அவ்வாறு  பிரச்சினைகளை தொடருமென்றால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...