நாளை முதல் QR முறைமை: வாகன இலக்கத்தின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR  முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் நாளை முதல் QR  முறைப்படி எரிபொருளை விநியோகிக்கவுள்ளன.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...