படுக்கை விரிப்புக்கு ஜனாதிபதியின் கொடியை பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்தார்!

Date:

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக வெல்லவிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

54 வயதான அவர் மாலம்பேயில் வசிப்பவராவார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததையடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...