படுக்கை விரிப்புக்கு ஜனாதிபதியின் கொடியை பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்தார்!

Date:

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக வெல்லவிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

54 வயதான அவர் மாலம்பேயில் வசிப்பவராவார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததையடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...