பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்குகள் ஆரம்பமாவதை முன்னிட்டு தாய்லாந்து பௌத்த துறவி பாகிஸ்தான் பயணம்!

Date:

வரலாற்றில் முதன்முறையாக, கி.பி 1-7 ஆம் நூற்றாண்டு பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்கு 1300 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.

அதற்கமைய தாய்லாந்தின் புகழ்பெற்ற புத்த துறவி, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனும் உலக பாரம்பரிய தளத்திற்கு  தனது 20 சீடர்களுடன் வருகைத் தந்தார்.

அவர் மூன்று மாத ‘Rain Retreat Program’ திட்டத்திற்காக சென்றுள்ளார். இது பொதுவாக தீவிர கற்றல் காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் படி துறவிகள் மழைக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி, சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படும் மூன்று மாத மடாலய பின்வாங்கலைச் செய்வார்கள்.

தக்ஸிலா, ஸ்வாட், தக்த்-இ-பாஹி மற்றும் பெஷாவர் பள்ளத்தாக்கில் தியானம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள்.

அத்தோடு, வழக்கமாக  இந்த திட்டம் கோஷமிடுதல், நன்கொடைகள் மற்றும் துறவிகளின் ஆசீர்வாதங்களை உள்ளடக்கிய ஒரு விழா நிகழ்வுடன் நிறைவுபெறும்.

வரலாற்றில் ஒரு உயர்மட்ட பௌத்த துறவி ஒருவர் ‘Rain Retreat Program’ நிகழ்ச்சிக்காக பௌத்த புனித இடங்களுக்குச் சென்று அமைதிச் செய்தியைப் பரப்புவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...