பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்குகள் ஆரம்பமாவதை முன்னிட்டு தாய்லாந்து பௌத்த துறவி பாகிஸ்தான் பயணம்!

Date:

வரலாற்றில் முதன்முறையாக, கி.பி 1-7 ஆம் நூற்றாண்டு பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்கு 1300 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.

அதற்கமைய தாய்லாந்தின் புகழ்பெற்ற புத்த துறவி, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனும் உலக பாரம்பரிய தளத்திற்கு  தனது 20 சீடர்களுடன் வருகைத் தந்தார்.

அவர் மூன்று மாத ‘Rain Retreat Program’ திட்டத்திற்காக சென்றுள்ளார். இது பொதுவாக தீவிர கற்றல் காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் படி துறவிகள் மழைக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி, சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படும் மூன்று மாத மடாலய பின்வாங்கலைச் செய்வார்கள்.

தக்ஸிலா, ஸ்வாட், தக்த்-இ-பாஹி மற்றும் பெஷாவர் பள்ளத்தாக்கில் தியானம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள்.

அத்தோடு, வழக்கமாக  இந்த திட்டம் கோஷமிடுதல், நன்கொடைகள் மற்றும் துறவிகளின் ஆசீர்வாதங்களை உள்ளடக்கிய ஒரு விழா நிகழ்வுடன் நிறைவுபெறும்.

வரலாற்றில் ஒரு உயர்மட்ட பௌத்த துறவி ஒருவர் ‘Rain Retreat Program’ நிகழ்ச்சிக்காக பௌத்த புனித இடங்களுக்குச் சென்று அமைதிச் செய்தியைப் பரப்புவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...