மீண்டும் கொவிட் அலை: 4ஆவது டோஸைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Date:

நாட்டில் மற்றொரு கொவிட்-19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், சமீபத்திய கொவிட் வைரஸின் மாறுபாடு காரணமாக தொற்றுநோய் மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதன்மூலம், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, கொவிட்-19 தடுப்பூசியின் 4ஆவது டோஸைப் பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2ஆவது பூஸ்டர் ஷாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்று கூறிய டாக்டர் குணவர்தன, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் 4வது டோஸைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேலும், தடுப்பூசி போடுவதன் மூலம் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும், சுகாதார திணைக்களத்தின் வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய ஒதுக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் அசேல குணவர்தன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தடுப்பூசி மையங்களை அணுகி முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...