மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை: கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழு!

Date:

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற சந்திப்பின் போத இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெதஆராச்சி, நிமல் லான்சா, நிரோஷன் பெரேரா, பியால் நிஷாந்த, சனத் நிஷாந்த, மயந்த திஸாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இந்தக் குழுவின் அங்கத்துவத்திற்கு திறைசேரியின் பிரதிநிதி ஒருவர் பரிந்துரைக்கப்படுவார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமிக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...