ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Date:

முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண அறிவிப்பிற்கு அமைவாக அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எந்தவொரு சிக்கலுமின்றி வழமைபோன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வழைமை போன்றே இன்றும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...