அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இராணுவ சிப்பாயிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்பு!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த ஜுலை 13ஆம் திகதி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாயை தாக்கி T-56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்திற்கு அடியில் இருந்து கடற்படையின் சுழியோடிகள் துப்பாக்கி மற்றும் வெற்று மெகசின்களையும் மீட்டுள்ளனர்.

இதையடுத்து துப்பாக்கி மற்றும் வெற்று மகசீன் ஆகியவை வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...