பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த ஜுலை 13ஆம் திகதி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாயை தாக்கி T-56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்திற்கு அடியில் இருந்து கடற்படையின் சுழியோடிகள் துப்பாக்கி மற்றும் வெற்று மெகசின்களையும் மீட்டுள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கி மற்றும் வெற்று மகசீன் ஆகியவை வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.