அவசரகாலச் சட்டம்: ‘ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்’

Date:

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் ஸ்தாபகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அது இலங்கைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கவும் வழிவகுக்கும் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தற்போதுள்ள பொதுச் சட்டமே போதுமானது எனவும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...