இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 குறைந்து ரூ.38 ஆக இருக்கும்.

இந்த விலை அதிகரிப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பேருந்துக் கட்டணக் குறைப்பு வழங்கப்படாவிட்டால் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 1955 இலக்கத்திற்கு அழைப்பெடுக்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், இந்த பஸ் கட்டண வசூலை கண்காணிக்க,  அதிகாரிகள் முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...