இலங்கைக்கு வரவிருந்த எரிவாயு கப்பல் 3 நாட்கள் தாமதமாகும்!

Date:

3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை தாமதமாகியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த கப்பல் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கப்பல் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதிக்காக உலக வங்கிக்கும் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த எரிவாயு ஏற்றுமதி நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் ஜூலை 11ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக சமையல் எரிவாயு வழங்கப்படாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதுடன் வரிசையிலும் காத்துக்கொண்டிருந்தமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...