இலங்கைக்கு வரவிருந்த எரிவாயு கப்பல் 3 நாட்கள் தாமதமாகும்!

Date:

3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை தாமதமாகியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த கப்பல் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கப்பல் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதிக்காக உலக வங்கிக்கும் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த எரிவாயு ஏற்றுமதி நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் ஜூலை 11ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக சமையல் எரிவாயு வழங்கப்படாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதுடன் வரிசையிலும் காத்துக்கொண்டிருந்தமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...