ஊடகவியலாளர்களை தாக்கிய விசேட அதிரடிப்படையின் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

தனியார் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி அதிகாரி ரொமேஷ் லியனகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை தெரிவிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு நிறுவன சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணியிடம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையின் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றினார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...