ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பில் பல்வேறு ஊடகங்களில் கடமையாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (11) மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்ததுடன் ” ஊடக சுதந்திரத்தை பறிக்காதே!”, “ஊடகத்தையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைக்காதே!”, ” ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க நினைக்காதே!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...