ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை: நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா!

Date:

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.
.
அதற்கமைய அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...