எரிசக்தி அமைச்சர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை சந்தித்தார்!

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் சில்லறை விற்பனை செய்வதற்கும் எண்ணெய் நிறுவனங்களை அழைப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அதேநேரம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பெற்றோல் சரக்குத் திட்டம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகத்தை நம்பி 1100க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கையிருப்பு பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...