எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்!

Date:

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிற்கு வந்துள்ள 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உர விநியோகம் இன்று ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு உரப் பொதி விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட உரப் பொதியானது 40,000 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் மூலம் இலங்கைக்கு 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 40,000 மெற்றிக் தொன் உரம் கடந்த சனிக்கிழமை ஜூலை 9ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இவை நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குப் பயன்படுகிறது.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தேயிலை பயிர்ச்செய்கைக்காக எஞ்சிய உரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...