எரிபொருள் நெருக்கடி: 26 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள் பணியிடங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பல அலுவலக ரயில்களும் உள்ளடங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...