கொவிட் காரணமாக, ராகம ரயில் நிலையம் மூடப்பட்டது!

Date:

ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக் காட்டியதால் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகவும், பயணச்சீட்டு ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதால் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி ரயில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...