கொவிட் காரணமாக, ராகம ரயில் நிலையம் மூடப்பட்டது!

Date:

ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக் காட்டியதால் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகவும், பயணச்சீட்டு ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதால் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி ரயில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...