கோட்டா கோ கம தாக்குதல்: 14 பேர் மருத்துவமனையில்

Date:

கொழும்பு, காலி முகத்திடலில் நேற்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றுகள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய பின்னர், அந்நகரில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இராணுவம் அருகிலுள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் கூடாரங்களை இடித்து, ஏராளமான போராட்டத் தலைவர்களை தடுத்து வைத்தது மற்றும் அப்பகுதியைத் தடுத்தது.

இந்த நிலையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...