கோட்டா கோ கம தாக்குதல்: 14 பேர் மருத்துவமனையில்

Date:

கொழும்பு, காலி முகத்திடலில் நேற்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றுகள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய பின்னர், அந்நகரில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இராணுவம் அருகிலுள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் கூடாரங்களை இடித்து, ஏராளமான போராட்டத் தலைவர்களை தடுத்து வைத்தது மற்றும் அப்பகுதியைத் தடுத்தது.

இந்த நிலையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...