‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!

Date:

கொழும்பு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கிராமம்’ போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அவசர சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தது.

போராட்டக்காரர்களை அடித்து உதைப்பது சட்டவிரோதமானதும் ஜனநாயகமற்றதுமான செயல் என்பதால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...