‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!

Date:

கொழும்பு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கிராமம்’ போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அவசர சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தது.

போராட்டக்காரர்களை அடித்து உதைப்பது சட்டவிரோதமானதும் ஜனநாயகமற்றதுமான செயல் என்பதால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...