கோட்டா-ரணில் பதவி விலகும் வரை நாடு தழுவிய வேலை நிறுத்தம், ஹர்த்தால்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரையில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த சில நாட்களில் நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் துறை பணியிடங்களில் இந்த தொழில்சார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர்  அனுப நந்துல தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை என்றால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இன்னும் பொதுமக்களால் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், தொழிற்சங்க நடவடிக்கை வரை இதனை இழுத்தடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும்  நந்துல தெரிவித்தார்.

ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஹர்த்தால், வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை விடவும் மேம்பட்ட தொழில்சார் நடவடிக்கைகள் இம்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...