சமையல் எரிவாயு கொள்முதலுக்கு மின்கட்டணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் முறைமை!

Date:

உள்நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கு மின்சாரக் கட்டண பத்திரத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அதன்படி, ஒருவர் எரிவாயுவைப் பெற விரும்பினால், எதிர்காலத்தில் அவரது வீட்டின் மின் கட்டணத்தை எரிவாயு விற்பனையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதன் மூலம் மின்கட்டணத்தை சமர்ப்பித்து, காஸ் வழங்கிய பின், காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டதாக பில்லில் முத்திரை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை கண்காணிக்க பொலிஸார் உதவியையும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு வரவுள்ளது.

தற்போது அதன் விநியோகத்தை வரும் 7ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ள 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவின் முதல் பாகம் நாடு முழுவதும் வந்து சேரவுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...