‘ஜனாதிபதி கோட்டாபய அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியது, ஜனாதிபதி எந்த தஞ்சமும் கேட்கவில்லை மற்றும் வழங்கப்படவில்லை.

அதேவேளை ‘சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் புகலிடம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது.

மேலும் தனிப்பட்ட பயணத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சிங்கப்பூர் வந்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

“ஜனாதிபதி அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என சிங்கப்பூர் அரசாங்கம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியள்ளது.

மக்கள் எழுச்சி மற்றும் பதவி விலகல் கோரிக்கையையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது இராஜினாமாவை வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

அவர் இன்னும் இராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கவில்லை என்றாலும், ஜனாதிபதி இன்று சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...