ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றம் ஜூலை 15ஆம் திகதி கூடவுள்ளது, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும், ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமைக்குள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...