நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் காற்றின் தரம், சத்தம் மற்றும் அதிர்வுகளின் ஒருங்கிணைப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்ததற்கு பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் ஜூலை 12 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி 16 மாவட்டங்கள் பச்சை வகையிலும் மற்ற மூன்று மாவட்டங்கள் மஞ்சள் வகையிலும் இருந்தன.
மஞ்சள் வகை என்பது மாசுக்கள் இருந்தாலும் காற்றின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆகும்.