நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது: மைத்திரி குற்றச்சாட்டு!

Date:

நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார்.
மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதலை நடத்தியமையின் விளைவினாலேயே அமைதியின்மை ஏற்பட்டது என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...