நாட்டில் நெருக்கடி தொடர்ந்தால் இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள்: செல்வம் எம்.பி

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில புலம் பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் இதற்காக நாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியா தலையிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

அவ்வாறு  பிரச்சினைகளை தொடருமென்றால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு...

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...