பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் ரணில்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இலங்கையிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இராஜினாமாவின் முறையான தன்மையை சரிபார்த்த பின்னர் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதன் மூலம் பதவி விலக முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...