கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவத்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2023 ஆம்ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.