புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன!

Date:

பல புகையிரத தொழிற்சங்கங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் உள்ளடங்குகின்றனர்.

இன்று அதிகாலை, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வராததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல தொலைதூர மற்றும் அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை ரயில்வே தொடர்பான பணிகளைச் செய்ய ஊழியர்கள் பற்றாக்குறையால் 22 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலவும் எரிபொருள் நெருக்கடியின் விளைவாக, தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...