அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலி சர்வதேச மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெத்தும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
‘அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது அவர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது’ என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவை உறுதிப்படுத்தியது. இதனையடுத்து அவர் உடனடியாக வேறு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.