பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம்: பீரிஸ்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்த  பீரிஸ், அவர் மிகவும் பொருத்தமான வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...