மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும்!

Date:

ஜூலை 10 ஆம் திகதி காலை முதல் மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் பேரூந்துகள் இடையூறு காரணமாக மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதங்களில் அதிகளவான பயணிகள் பயணிக்க வந்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் இ.போ.ச மற்றும் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பயணிக்கும் பல பஸ்கள் இன்று இயங்காததால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிப்போ ஊழியர்கள் நேற்று (ஜூலை 9) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று பணிக்கு வந்த சில சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், சில பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...