‘மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை’: எரிசக்தி அமைச்சர் காஞ்சன

Date:

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையின் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை பிரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மின்சார சபை2014 முதல் புதிய பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் எதையும் தொடங்கவில்லை அல்லது இயக்கவில்லை.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே முன்னோக்கி செல்லும் வழி என்றாலும், இதுபோன்ற திட்டங்களை எளிதாக்கும் அணுகுமுறை பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வு தேவை என்பதை ஒப்புக்கொண்ட அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இது தொடங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...